தினகரன் 17.08.2012
கழுகுமலையில் மரக்கன்றுகள் நடும் விழா
கழுகுமலை, : கழுகுமலை பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அருணா, செயல் அலுவலர் சேகர் முன்னிலை வகித்தனர் பேரூராட்சி வளாகம், கோவில்பட்டி மெயின் ரோடு ஆகிய இடங்களில் மரக்கன்றுகளை பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியன் நட்டினார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் இளநிலை உதவியாளர்கள் கணேசன், சிங்கராஜ், மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.