தினமலர் 20.08.2012
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே தலைஞாயிறு டவுன் பஞ்சாயத்தில் நடந்த பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு டவுன் பஞ்சாயத்தில், பி ளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பை கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேர ணி நடந்தது. இதில், டவுன் பஞ் சாயத்து தலைவர் பத்மா பேரணியை துவக்கி வைத்து, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இல்லாத டவுன் பஞ்சாயத்தாக தலைஞாயிறு பஞ்சாயத்து விரைவில் உருவாக்கப்படும் என்றார்.செயல் அலுவலர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் அய்யப்ப ன் மற்றும் கவுன்சிலர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்று பொதுமக்களிடம்பிளாஸ்டிக் ஒழி ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.