Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இலஞ்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கலி

Print PDF

தினமலர்             20.08.2012

இலஞ்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கலி

குற்றாலம்:இலஞ்சி டவுன் பஞ்., பகுதியில் பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனித சங்கிலி நடந்தது.

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் அடிப்படையிலும், டவுன் பஞ்., உதவி இயக்குனர் ஆலோசனையின்படியும் இலஞ்சி டவுன் பஞ்., பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில் அனைத்து கடைகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் முழுமையாக இலஞ்சி பகுதியில் பிளாஸ்டிக்கை ஒழிப்பது என்பதை வலியுறுத்தி மனித சங்கிலி நடந்தது.டவுன் பஞ்., தலைவர் காத்தவராயன், செயல் அலுவலர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் ராமச்சந்திரன், கவுன்சிலர்கள் சித்திரைகுமார், சுப்பிரமணியன், சிவக்குமார், மாரியம்மாள், கணேசன், சங்கர், ராஜமாணிக்கம், வள்ளியம்மாள், பார்வதி, முருகன் மற்றும் சுகாதார ஆய்வாளர் குளத்தூரான், செல்லக்குமார், நாராயணன், மாரியப்பன், அலுவலக உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 20 August 2012 07:22