தினமலர் 20.08.2012
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
எட்டயபுரம்:எட்டயபுரம் மாரியப்பா நடுநிலைப்பள்ளியில் டவுன் பஞ்.,சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.சிறப்பு கருத்தரங்கம் முகாமிற்கு டவுன் பஞ்.,தலைவர் கோவிந்தராஜ பெருமாள் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் ரெஜினால்டு சேவியர் வரவேற்றார். மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்யும் பொருட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கருத்தரங்கம் சிறப்பு முகாம் நடந்தது. ஆசிரியை செல்லத்தாய் நன்றி கூறினார்.