Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பொருட்களுக்கு குட்பை...மக்களை கவரும் பாக்கு மட்டை தட்டு, கப்

Print PDF

தினமலர்     23.08.2012

பிளாஸ்டிக் பொருட்களுக்கு குட்பை...மக்களை கவரும் பாக்கு மட்டை தட்டு, கப்

பிளாஸ்டிக் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அரக்கன். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி மனித உயிர்களுக்கும் கடல் வாழ் உயிரினங்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தாலாக உருவெடுத்துள்ள பேரழிவு சக்தி. உலகம் முழுவதும் சராசரியாக ஒரு ஆண்டுக்கு 105 மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

உலகில் உள்ள ஒவ்வொரு நபரும் ஆண்டொன்றுக்கு சராசரியாக 70 கிலோ அளவுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகின்றனர் என ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. பிளாஸ்டிக்கை தயாரிப்பதற்கான செலவு குறைவு மட்டுமல்ல நாம் விரும்பும் எந்த ஒரு வடிவத்திலும் எளிதாக இதை உருமாற்றி விடலாம். ஆனால் இதை அழிப்பது என்பது மட்டும் எளிதான காரியம் அல்ல. 40 மைக்ரோ தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மத்திய,மாநில அரசுகள் தடை விதித்தபோதும் உள்ளாட்சி நிர்வாகம் அவ்வப்போது பிளாஸ்டிக் தடை அறிவிப்பு வெளியிடுவதுடன் சரி தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்வது இல்லை. இன்று கடைகளில் வாங்கும் அனைத்து பொருட்களும் பிளாஸ்டிக் பைகளில் தான் கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு பயன் படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பொதுமக்களால் வீதிகளில் தாக்கி வீசப்படுவதன் விளைவாக பூமிக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் புதைந்து நிலத்தில் பெய்யும் மழைநீர் பூமிக்குள் ஊடுருவதை தடுக்கிறது. இதனால் நிலத்தடிநீர் குறைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆறு, ஏரி,குளம் போன்ற பகுதிகளில் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் கடலுக்குள் செல்வதால் கடலில் சுற்று சூழலும் பாதிக்கப்படுவதுமட்டுமல்லாமல் கடல் வாழ் உயிரினங்களுக்கு மலட்டுத்தன்மையையும்,உயிருக்கு உலை வைக்கும் நிகழ்ச்சிகளும் நித்தம் அரங்கேறி வருகிறது. அணுகுண்டால் ஏற்படும் பாதிப்பைவிட பிளாட்ஸ்டிக் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் பயங்கர மானது என்று சுப்ரீம்கோர்ட் கூட சமீபத்தில் எச்சரித்துள்ளது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இதற்கு மாற்றுப் பொருளாக பாக்கு மட்டையில் இருந்து தட்டு, கப்புகள் தயாரிக்கப்படுகிறது. இதனை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள செங்கோட்டை தொழிலதிபர் ஈஸ்வரன் அய்யரின் மகள் சுபலட்சுமி உற்பத்தி பொருள் பற்றி கூறியதாவது: ""இயற்கைக்கு உகந்த பாக்கு மட்டையில் தயாரிக்கப்பட்ட தட்டுகள், கப்புகள் ஆகியன மெல்ல..மெல்ல சந்தையில் நுழைய தொடங்கிவிட்டன.சுற்றுப்புற சூழலை பாதிக்காது இயற்கைக்கு கேடுவிளைவிக்காத இத்தகைய பொருட்களின் மேல் மக்களின் கவனம் திரும்பி உள்ளது. சமீப காலமாக இப்பாக்கு மர மட்டைகள் இயந்திரம் மூலம் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படுகிறது.

அதாவது 12'',10"",8'',6'',4'' அளவில் தயாரிக்கப்பட்டு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

-கே.செல்லப்பெருமாள்-