Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிங்கம்புணரியில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Print PDF

தினமணி           23.08.2012

சிங்கம்புணரியில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

சிங்கம்புணரி, ஆக. 22: சிங்கம்புணரியில் வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் சிறு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் புதன் கிழமை பறிமுதல் செய்தனர்.

சிங்கம்புணரி பேரூராட்சி செயல் அலுவலர் சஞ்சீவி தலைமையில் பேரூராட்சிப் பணியாளர்கள், ஹோட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சிறு கடைகளில் 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் இது போன்ற பிளாஸ்டிக் பைகளை வருங்காலங்களில் பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களிடம் பேரூராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை செய்தனர்.