தினமலர் 23.08.2012
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க தாளியூர் பேரூராட்சி தீர்மானம்
பேரூர்:""பொதுமக்கள், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்'' என, தாளியூர் பேரூராட்சியில், தீர்மானிக்கப்பட்டுள்ளது.தாளியூர் பேரூராட்சி அலுவலகத்தில், கவுன்சிலர்கள் மன்றக் கூட்டம், நேற்று முன் தினம், நடந்தது.தலைவர் புனிதன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், ஜூலை மாதத்திய கேட்பு, வசூல் நிலுவைப்பட்டியல், பிறப்பு, இறப்பு பதிவுகள் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது. தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ., நிதியின் மூலம், தாளியூர் பேரூராட்சி 9ம் வார்டில், நான்கு லட்சம் ரூபாயில் மேல்நிலைத்தொட்டி, கலிக்கநாய்க்கன்பாளையம் கீழ்ச்சித்திரைசாவடியிலுள்ள, வெங்கடேஷ் தோட்டம் முதல் மாமரத்து வயல்வரை, ஏழு லட்சம் ரூபாயில் தார்சாலை அமைத்தல், நான்கு லட்சம் ரூபாயில் கலிக்கநாய்க்கன்பாளையத்தில் அங்கன்வாடி மையம் கட்டுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
ஜூலை மாதத்தின் செலவுச் சீட்டுகள் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இறுதியில், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டுமெனவும், பேரூராட்சி நிர்வாகத்தின் அறிவிப்பை மீறி, பயன்படுத்துவோர் மீது, அபராதம் விதிக்கப்படுமெனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. துணைத்தலைவர் ரங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜூலை மாதத்தின் செலவுச் சீட்டுகள் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இறுதியில், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டுமெனவும், பேரூராட்சி நிர்வாகத்தின் அறிவிப்பை மீறி, பயன்படுத்துவோர் மீது, அபராதம் விதிக்கப்படுமெனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. துணைத்தலைவர் ரங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.