Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மரக்கன்றுகள் நடும் விழா

Print PDF

தினமணி             25.08.2012

மரக்கன்றுகள் நடும் விழா

உளுந்தூர்பேட்டை, ஆக. 24: உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உள்பட்ட 5-வது வார்டில் சுகாதார விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி மன்றத் தலைவர் க.ஜெயசங்கர் தலைமை வகித்து, சுகாதார விழிப்புணர்வு முகாமைத் தொடங்கி வைத்தார். பின்னர் 5-வது வார்டில் வீதி, வீதியாகச் சென்று கழிவு நீர் செல்லும் கால்வாய்களைப் பார்வையிட்டு தூர்ந்து போன இடங்களில் அவற்றை பேரூராட்சி துப்புறவு ஊழியர்களைக் கொண்டு சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

÷பின்னர் வார்டில் உள்ள வீதிகளில் மரக்கன்றுகளை நட்டார். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தாண்டவராயன், கவுன்சிலர்கள் மாலதி ராமலிங்கம், சீனு, தலைமையாசிரியர்(ஓய்வு) ராஜமாணிக்கம், பேரூராட்சி ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.