தினமணி 25.08.2012
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
போளூர், ஆக. 24: போளூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.பேரணியை மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளே கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து போளூர் பேருந்து நிலையம் அருகே மனிதச் சங்கிலி நடைபெற்றது.
பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் (வேலூர் மண்டலம்) மலையமான் திருமுடிக்காரி, செயல் அலுவலர் நிஷாத், பேரூராட்சித் தலைவர் என்.கே.பாபு, துணைத் தலைவர் செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன், டிஎஸ்பி முகமது பலுலுல்லா, காவல் ஆய்வாளர் செல்வழகன், மண்டலத் துணை வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, சமுகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் ஜெயந்தன், அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் பள்ளித் தலைûயாசிரியர்கள் வாசு, முருகேசன், இளநிலை உதவியாளர்கள் அருண்குமார், பன்னீர்செல்வம், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.