தினகரன் 27.08.2012
பிளாஸ்டிக் பை பயன்பாடு குறித்து செப். 14 வரை கண்காணிப்பு பேரூராட்சி அதிகாரி அறிக்கை
மண்ணச்சநல்லூர், :சா.கண்ணனூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பை பயன்படுத்துகின்றனரா என்பதை வரும் செப்டம் பர் 14ம் தேதி வரை கண்காணிக்கப்படும் என்று நிர் வாக அதிகாரி தெரிவித்துள் ளார்.
சா.கண்ணனூர் பேரூ ராட்சி நிர்வாக அதிகாரி கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: சா.கண்ணனூர் பேரூராட்சியில் கடந்த 1.5.2012 முதல் 40 மைக்ரான் அளவிற்கு கீழ் உள்ள பிளா ஸ்டிக் பொருட்கள் விற் பனை செய்வது, பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இதைமீறி விற் பனை மற்றும் பயன்படுத்து வது கண்டறியப்பட்டு இது வரை ரூ.42, 700 அபராதம் விதிக்கப் பட்டு பேரூராட்சி பொது நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க அனைத்து சிறு வியாபாரி கள் மற்றும் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுக்கு கடி தம் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களால் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு எதி ராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு இடையே பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. பேரூராட்சிக்கு வருகை தரும் பக்தர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. பேரூ ராட்சி தலைவர், செயல் அலுவலர், மன்ற உறுப்பினர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக் கள் கலந்து கொண்ட மனித சங்கிலி விழிப்புண ர்வு பேரணி நடத்தப்பட் டது. வரும் 14ம் தேதி வரை தொடர் கண்காணிப்பு, 15ம் தேதி பேரூராட்சி பகுதியில் முற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத நிலை ஏற்படுத்தப்படும்.