Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாலிதீன் பைகளுக்கு மாற்றாக பயன்படும் புதுரக பை...சுற்றுச்சூழலுக்கு கேடு?ஆய்வுக்கு உட்படுத்த மாசுகட்டுப்பாடு வாரியம் முடிவு

Print PDF
தினமலர்           29.08.2012

பாலிதீன் பைகளுக்கு மாற்றாக பயன்படும் புதுரக பை...சுற்றுச்சூழலுக்கு கேடு?ஆய்வுக்கு உட்படுத்த மாசுகட்டுப்பாடு வாரியம் முடிவு

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில், தடை செய்யப்பட்டுள்ள பாலிதீன் கவர்களுக்கு மாற்றாக, மளிகை கடைகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் புதுரக பைகள் வழங்கப்படுகின்றன. அவை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதா என ஆய்வுக்கு உட்படுத்த மாசுக்கட்டுப்பாடு வாரியம் முடிவு செய்துள்ளது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 40 மைக்ரானுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள் ளது. அதன் விற்பனையை தடுத்தால், பயன்பாடு வெகுவாக குறையும் என்பதற்காக, கடைகளிலும், ஓட்டல்களிலும் ஆய்வு நடத்தி, அபராதமும் விதிக்கப்படுகிறது. காலம் கடந்த நடவடிக்கையாக இருந்தாலும், கடைகளிலும், ஓட்டல்களிலும் பாலிதீன் பயன்பாடு குறைந்து வருகிறது. பாலிதீன் பைகளுக்கு மாற்றாக, மளிகை கடைகளிலும், பேக்கரிகளிலும், "போம்' துணி போன்ற ஒரு வகை துணியில் தைக்கப்பட்ட புதுரக பைகள் வழங்கப்படுகின்றன.

வாடிக்கையாளரிடம் ஒன்று முதல் மூன்று ரூபாய் வரை பெற்றுக்கொண்டு, அவ்வகை பை கொடுக்கப்படுகிறது. இவை, எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தாமல், பயன்பாட்டுக்கு வந்துள்ளன. "திருப்பூர் பிளாஸ்டிக் மற்றும் ஜெனரல் மெர்ச்சன்டர்ஸ் அசோசியேஷன்' நிர்வாகி கள், அத்தகைய பைகள், "ஆபத்தை விளைவிப்பவை,' என, மேயர், துணை மேயரிடம் நேற்று முறையிட்டனர்.அவர்கள் கூறுகையில், "பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளில், 40 மைக்ரானுக்கும் அதிகமானவற்றை பயன்படுத்த கோர்ட் அனுமதித்துள்ளது. அவ்வகை பொருட்களை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தலாம். ஆய்வுக்கு வரும் அதிகாரிகள், எவ்வித பரிசோதனையும் செய்யாமல், மொத்தமாக அள்ளிச்செல்கின்றனர். பேப்பர் சேகரிக் கும் நபர்கள், 40 மைக்ரானுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, கிலோ 30 ரூபாய்க்கு விற்கின்றனர்."தற்போது, மாநகராட்சி பகுதிகளில், தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்களுக்கு மாற்றாக, புதுரக பைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவ்வகை பைகளும் பாலிதீன் கலவையால் உருவாக்கியவை. மண்ணில் மக்காமல், தங்கியிருந்து, நிலத்தடி நீரையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும். மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும், 40 மைக்ரானுக்கு அதிகமான பிளாஸ்டிக் பொருட்களை விற்க அனுமதிக்க வேண்டும்,' என்று முறையிட்டனர்.

மேயர் விசாலாட்சி கூறுகையில்,""சுகாதாரத்துக்கு சவாலாக உள்ள அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட உள்ளது. மாற்றாக, வேறு பைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக, உற்பத்தியாளர்களிடம் இருந்து புது ரக பைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. ""அவ்வகை பைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்குமா என்று மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் ஆலோசனை பெறப்படும். அதற்காக, வாரிய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட உள்ளது. பொதுமக்களுக்கும், சுகாதாரத்துக்கும் ஆபத்து விளைவிக்காத பொருட்கள் :மட்டும் அனுமதிக்கப்படும்,'' என்றார்.மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் (பொறுப்பு) உலகநாதனிடம் கேட்டபோது,""பாலிதீன் பைகளுக்கு மாற்றாக வந்துள்ள பைகள், எவ் வகையில் தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்து ஆராயப்படும். உள் ளாட்சி அமைப்புகளில் இருந்தும், மாவட்ட நிர்வாகத்தில் இருந்தும் கருத்து கேட்கும்போது, முழுமையாக ஆராய்ச்சி செய்து, விரிவாக அறிக்கை அளிக்கப்படும்,'' என்றார்.
Last Updated on Thursday, 30 August 2012 09:54