Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போடி நகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினமலர்         31.08.2012

போடி நகராட்சி எச்சரிக்கை

போடி:போடியில் பிளாஸ்டிக் கேரி பைகள், கப்புகள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நகராட்சி கமிஷனர் சசிகலா தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் பழனிராஜ், வர்த்தகர்கள் சங்க செயலாளர் தனசேகரன், இணை செயலாளர் வேல்முருகன், நகராட்சி கவுன்சிலர்கள், வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.
பிளாஸ்டிக் கேரி பைகள், கப்புகளை,திருமண மண்டபங்கள், கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில்,பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. மீறி பயன்படுத்தினால், 500 முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிப்பது,என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.