தின மணி 19.02.2013
தரமற்ற பிளாஸ்டிக் பொருள்கள்:கடைகளில் திடீர் சோதனை
தரமற்ற பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில்,
தருமபுரியை அடுத்துள்ள நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், இலளிகம் ஊராட்சியில் உள்ள கடைகளில் திங்கள்கிழமை திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சற்குணம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெ.பிரதாபன் ஆகியோர் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.
40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருள்களான டம்ளர், பை உள்ளிட்ட பொருள்களை கைபற்றினர். அவற்றை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.800 அபராதம் விதிக்கப்பட்டது.
தரமற்ற பிளாஸ்டிக் பொருள்கள்:கடைகளில் திடீர் சோதனை
தரமற்ற பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில்,
தருமபுரியை அடுத்துள்ள நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், இலளிகம் ஊராட்சியில் உள்ள கடைகளில் திங்கள்கிழமை திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சற்குணம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெ.பிரதாபன் ஆகியோர் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.
40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருள்களான டம்ளர், பை உள்ளிட்ட பொருள்களை கைபற்றினர். அவற்றை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.800 அபராதம் விதிக்கப்பட்டது.