Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

Print PDF
தின மணி             20.02.2013

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் பேரூராட்சி, திருவண்ணாமலை அமைதி அறக்கட்டளை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பேரூராட்சித் தலைவர் சித்ரா கார்த்திகேயன் தலைமை வகித்தார். அமைதி அறக்கட்டளை இயக்குநர் ராஜாராம் வரவேற்றார். செயல் அலுவலர் அண்ணாதுரை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்துப் பேசினார். பின்னர் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து பேரூராட்சி வளாகம் மற்றும் பேரூராட்சிக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.


Last Updated on Thursday, 21 February 2013 12:05