பிளாஸ்டிக் சோதனை:ரூ.16 ஆயிரம் அபராதம்
திருவண்ணாமலை நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய திடீர் ஆய்வில், பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்திய கடைக்காரர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
நகராட்சி எல்லைக்குள்பட்ட பேருந்து நிலையம், போளூர் சாலை பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் இரா.ஆல்பர்ட், வினோத் கண்ணா ஆகியோர் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, 40 மைக்ரான் அளவுக்குக் குறைவான திறனுள்ள பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த கடைக்காரர்களுக்கும், பயன்படுத்திய கடைக்காரர்களுக்கும் தலா ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட கடைக்காரர்களிடம் இருந்து முதல் முறையாக ரூ.16 ஆயிரம் அபராதத் தொகையை அதிகாரிகள் வசூலித்தனர்.
இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என்றும், கடைக்காரர்கள் 40 மைக்ரான் அளவுக்கு குறைவான திறன் கொண்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று நகராட்சி ஆணையர் பெ.விஜயலட்சுமி எச்சரித்துள்ளார்.
திருவண்ணாமலை நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய திடீர் ஆய்வில், பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்திய கடைக்காரர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
நகராட்சி எல்லைக்குள்பட்ட பேருந்து நிலையம், போளூர் சாலை பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் இரா.ஆல்பர்ட், வினோத் கண்ணா ஆகியோர் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, 40 மைக்ரான் அளவுக்குக் குறைவான திறனுள்ள பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த கடைக்காரர்களுக்கும், பயன்படுத்திய கடைக்காரர்களுக்கும் தலா ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட கடைக்காரர்களிடம் இருந்து முதல் முறையாக ரூ.16 ஆயிரம் அபராதத் தொகையை அதிகாரிகள் வசூலித்தனர்.
இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என்றும், கடைக்காரர்கள் 40 மைக்ரான் அளவுக்கு குறைவான திறன் கொண்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று நகராட்சி ஆணையர் பெ.விஜயலட்சுமி எச்சரித்துள்ளார்.