Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டுக்கு தடைமீறினால் நடவடிக்கை: நகராட்சி எச்சரிக்கை

Print PDF
தின மலர்                26.02.2013

பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டுக்கு தடைமீறினால் நடவடிக்கை: நகராட்சி எச்சரிக்கை

கோபிசெட்டிபாளையம்: கோபி நகராட்சியில், 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கோபி நகராட்சி கமிஷனர் ஜான்சன் கூறியதாவது:பிளாஸ்டிக் கழிவுகள் கையாளுதல் விதி, 2011ன்படி கோபி நகராட்சியில், 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள், அனைத்து வகையான பிளாஸ்டி டீ கஃப்கள் விற்கவோ, உபயோகிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்யப்பட்டது குறித்து அனைத்து வியாபாரிகளுக்கும் பல முறை தெரிவித்தும், கால அவகாசம் வழங்கியும், இன்னும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் உபயோகத்தில் உள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகளை உபயோகப்படுத்துபவர்களுக்கு அபராதம் விதித்து வசூல் செய்ய நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மீறி உபயோகிப்பாளர்களுக்கு, 100 ரூபாய், பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு, 500 ரூபாய், சில்லரை விற்பனையாளர்களுக்கு, 1,000 ரூபாய், மொத்த விற்பனையாளர்களுக்கு, 2,000 ரூபாய், தயாரிப்பாளர்களுக்கு, 5,000 ரூபாய் என அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து மூன்று முறை அபராதம் விதிக்கப்பட்டால் வியாபார உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், குற்ற வழக்கும் தொடரப்படும்.பல இன்னல்களையும், சுகாதாரக் கேடுகளையும் விளைவிக்கும், 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்த வேண்டாம், என அவர் கேட்டுக்கொண்டார்.
Last Updated on Tuesday, 26 February 2013 11:40