Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை அருகே 500 மரக்கன்றுகள் நடும் விழா

Print PDF
தினத்தந்தி                02.07.2013

கோவை அருகே 500 மரக்கன்றுகள் நடும் விழா


கோவை அருகே வெள்ளகிணர் பகுதியில் 500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு அரிமா சங்க ஆளுநர் பரமசிவம் தலைமை தாங்கினார். மாநகராட்சி கவுன்சிலர் சாரதா சண்முகம் நலச்சங்க தலைவர் காந்திமதிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மேயர் செ.ம.வேலுசாமி மரக்கன்றுகள் நட்டார். விழாவில் நலச்சங்க செயலாளர் தண்டபானி, பொருளாளர் சின்னப்பராஜ், துணைத்தலைவர் செல்வராஜ், அரிமா நிர்வாகிகள் மணிகண்டன் ஜெய்மோகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.