தினகரன் 01.08.2013
சிறை வளாகத்தில் 1,200 மரக்கன்றுகள்
கோவை: தமிழக முதல்வரின் 65வது பிறந்த நாளையொட்டி, மாநிலம் முழுவதும் 65 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்கீழ், கோவை மத்திய சிறை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கருணாகரன், மேயர் செ.ம.வேலுசாமி ஆகியோர் துவக்கிவைத்தார். மாணவ, மாணவிகள் திரளாக கலந்துகொண்டு, நேற்று ஒரே நாளில் 1,200 மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில், சிறுதுளி அறங்காவலர் வனிதா மோகன், மாவட்ட வன அலுவலர் செந்தில்குமார், சி.ஆர்.சுவாமிநாதன், சிறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சிறை வளாகத்தில் 1,200 மரக்கன்றுகள்
கோவை: தமிழக முதல்வரின் 65வது பிறந்த நாளையொட்டி, மாநிலம் முழுவதும் 65 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்கீழ், கோவை மத்திய சிறை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கருணாகரன், மேயர் செ.ம.வேலுசாமி ஆகியோர் துவக்கிவைத்தார். மாணவ, மாணவிகள் திரளாக கலந்துகொண்டு, நேற்று ஒரே நாளில் 1,200 மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில், சிறுதுளி அறங்காவலர் வனிதா மோகன், மாவட்ட வன அலுவலர் செந்தில்குமார், சி.ஆர்.சுவாமிநாதன், சிறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.