தினகரன் 02.09.2013
ஆற்காடு நகராட்சி பூங்காக்களில் மரக்கன்றுகள் நடும்விழா
ஆற்காடு, : ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட பூங்காக்களில் மரக்கன்றுகள் நடும்விழா நேற்று நடந்தது.
ஆற்காடு நகராட்சியும், அரகம் தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்திய விழாவிற்கு நகராட்சி தலைவர் ஆர்.புருஷோத்தமன் தலைமை தாங்கி கண்ணன் பூங்கா, பயோகேஸ் திட்ட செயல்படும் இடத்தில் உள்ள பூங்கா பூபதி நகர், சீதாராமன் தெரு ஆகிய இடங்களில் மரக்கன்றுகளை நட்டு விழாவை துவக்கி வைத்தார். ஆணையர் செ.பாரிஜாதம், பொறியாளர் கார்த்திகேயன், சுகாதார அலுவலர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் முருகன் வரவேற்றார்.
மொத்தம் 100 மரக்கன்றுகள் முதற்கட்டமாக நடப்பட்டது. தொடர்ந்து நகரில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் முக்கிய இடங்களிலும் மரக்கன்றுகள் நடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். விழாவில் கவுன்சிலர் கே.ஏ.சுந்தரம், தொண்டு நிறுவன நிர்வாகி சுவாதி, பாவனா, சிநேகா, ஷீமா, திவ்யா, லலிதா, மது உட்பட பலர் கலந்து கொண்டனர்.