தினமணி 05.09.2013
மதுரை மாநகராட்சி மைய அலுவலகமான அண்ணா மாளிகையில், ரூ. 55.83 லட்சத்தில் சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாமன்ற கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில், அரசு அலுவலகங்களில் மின்பற்றாக்குறையை ஈடுசெய்யும் பொருட்டு, முதல்வர் ஜெயலலிதா அறிமுகம் செய்துள்ள சூரியஒளி மின்சாரக் கொள்கை 2012, திட்டத்தின் கீழ் இந்த ஏற்பாடு செய்யப்படுவதாகவும், தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி மையம் வழிகாட்டுதலின்படி இத்திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, நகரப்பொறியாளர் மற்றும் ஆணையர் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், நிர்வாக ஒப்புதலுக்கும், ஒப்பந்தப் புள்ளி கோரவும் ஒப்புதல் கோரப்பட்டு ஏற்கப்பட்டதாகத் தெரிகிறது.