தினமலர் 05.08.2021
சென்னையின் காற்றின் தரம் உயர்வு; மாசு கட்டுப்பாட்டு வாரியம்
சென்னை: சென்னை மாநகரில் கொரோனா 2வது அலையால் அமல்படுத்தப்பட்டிருந்த
ஊரடங்கின் காரணமாக காற்றின் தரம் உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு
மாசுக்கட்டுப்பாடு வாரியம் கூறியுள்ளது.
சென்னையில் நடப்பு ஆண்டு
மார்ச் மாதத்தில் காற்றின் தரமானது திருப்தி என்ற நிலையில் இருந்தது.
இந்நிலையில், கொரோனா 2வது அலையில், ஊரடங்கின் காரணமாக வாகனப் போக்குவரத்து
குறைந்ததால், ஏப்ரல், மே மாதங்களில், கத்திவாக்கம், ராயபுரம், பெருங்குடி,
கோயம்பேடு ஆகிய இடங்களில் காற்றின் தரமானது நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளதாக
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
ஆனால்,
தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால், பெட்ரோல் மற்றும் டீசல்
வாகனங்களின் அதிக பயன்பாடு, ஜெனரேட்டர் எரிபொருள் பயன்பாடு, கட்டுமான
வேலைகள் போன்ற காரணங்களால் காற்றின் தரமானது மீண்டும் குறைந்து வருகிறது.
சென்னையில் உள்ள ஆலந்தூரில் அமைந்துள்ள மத்திய மாசு கட்டுப்பாட்டு
வாரியத்தின் அளவின்படி காற்றின் தரம் பி.எம்.2.5 என்ற மிதமான நிலையில்
இருப்பதாக கூறுகின்றனர்.