Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாகை நகராட்சியில் மரக் கன்றுகள் நடும் விழா

Print PDF

தினமணி 25.11.2009

நாகை நகராட்சியில் மரக் கன்றுகள் நடும் விழா

நாகப்பட்டினம், நவ. 24: தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தின விழா நிகழ்ச்சியாக நாகை நகராட்சி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட ஆட்சியர் ச. முனியநாதன் தலைமை வகித்து, மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடக்கி வைத்தார். நாகை நகராட்சித் தலைவர் ஆர். சந்திரமோகன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட வன உயிரினக் காப்பாளர் வெ. திருநாவுக்கரசு, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அண்ணாதுரை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் பன்னீர்செல்வம், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜோதி, அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 25 November 2009 06:35