தினமணி 29.12.2009
நாகூரில் பிளாஸ்டிக் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வுப் பேரணி
நாகப்பட்டினம், டிச. 28: நாகையை அடுத்த நாகூரில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பிளாஸ்டிக் பொருள்கள் எதிர்ப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்ட ஆட்சியர் ச. முனியநாதன் பேரணியைத் தொடக்கி வைத்தார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். வீராசாமி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் எம். பன்னீர்செல்வம், நாகூர் தர்கா நிர்வாக அறங்காவலர் கலிபா சாகிபு, தேசியப் பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம். முத்தமிழ் ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு வாசகங்களுடன் பள்ளி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். நாகூர் தர்கா அருகிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி, முக்கிய வீதிகள் வழியே சென்று நாகூர் கடற்கரையில் நிறைவடைந்தது.