தினமணி 05.01.2010
பழனியில் பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல்
பழனி ஜன. 4: பழனிக்கு தற்போது ஐயப்ப மற்றும் முருக பக்தர்கள் அதிக அளவில் வருவதால், கடைகளில் பிளாஸ்டிக் கப்புகள் உபயோகம் அதிகமாகி உள்ளது. பயன்படுத்தப்படும் இந்த கப்புகள் தெருக்களில் வீசப்படுவதால், சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
இந்நிலையில், நகராட்சி ஆணையர் சித்திக், நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம் ஆகியோர் உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளர்கள் சையது அபுதாகீர், மணிகண்டன், நெடுமாறன், மதுரை வீரன் உள்ளிட்டோர், திங்கள்கிழமை ஆய்வில் ஈடுபட்டனர்.
கடை வீதி, பஸ் நிலைய பகுதியிலும் பிளாஸ்டிக் பை மற்றும் கப்புகள் விற்கும் கடைகளில் இருந்து 13 ஆயிரம் பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.