Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புகையில்லா போகி: மேயர் வேண்டுகோள்

Print PDF

தினமலர் 12.01.2010

புகையில்லா போகி: மேயர் வேண்டுகோள்

சென்னை : "சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல், புகையில்லா போகி கொண்டாட உறுதி மொழி ஏற்க வேண்டும்' என்று, மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு மேயர் சுப்ரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாளை போகி பண்டிகை கொண்டாடப் படுவதை முன்னிட்டு, பழைய பொருட்கள், டயர், ரப்பர் போன்ற பொருட்களை எரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிப்பு, மாசு ஏற்படு கிறது. இதைத் தவிர்க்க, மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புகையில்லா போகி கொண்டாட உறுதி மொழி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி, மேயர் சுப்ரமணியன், ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என, 313 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தி உள்ளார். இன்று காலை நடைபெறும் பள்ளி இறை வணக்க கூட்டத்தில், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் புகையில்லா போகி கொண்டாட உறுதி மொழி ஏற்பர்.

Last Updated on Tuesday, 12 January 2010 07:17