தினமலர் 13.01.2010
நகராட்சி பள்ளி மாணவர்கள் போகி விழிப்புணர்வு ஊர்வலம்
கடலூர் : கடலூர் நகராட்சி மேல் நிலைப்பள்ளி என்.எஸ். எஸ்., ஜே.ஆர்.சி., பசுமைப்படை சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பழனி துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் <உதவி தலைமை ஆசிரியர் மோகன்குமார், என்.எஸ்.எஸ்., அலுவலர் ரவி, ஜே.ஆர்.சி., ஆலோசகர் பாலு, பசுமைப்படை பொறுப்பாளர் புகழேந்தி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.ஊர்வலத்தில் புகையில்லாமல் போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை மாணவர் கள் கையில் ஏந்திச் சென்றனர்.