தினமணி 04.02.2010
பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
கூடலூர், பிப். 3: கூடலூர் அடுத்துள்ள முதுமலை சரணாலயத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை தேசிய பசுமைப் படை மாணவர்கள் அகற்றினர். அத்திக்குண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப் படை மாணவர்கள் முதுமலை புலிகள் காப்பகத்தின் மையப் பகுதியில் வன விலங்குளுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பசுமைப் படை பொறுப்பாசிரியர் எஸ்.பிரதீப் வழிகாட்டுதலின் பேரில் 20 மாணவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்