தினமணி 04.02.2010
மணிமுத்தாறில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தினால் அபராதம்
அம்பாசமுத்திரம், பிப். 3: மணிமுத்தாறு பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பயன்படுத்தினால் ரூ. 250 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுóள்ளது.
இது குறித்து மணிமுத்தாறு சிறப்புநிலை பேரூராட்சித் தலைவர் சு. முருகன்சுப்பிரமணியன், செயல் அலுவலர் செ.ரா. ராஜேந்திரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
இப் பேரூராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது 20 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் 20-க்கு 30 செமீ அளவுக்கு குறைவாக பைகள் தயாரித்தல், சேமித்து வைத்தல், விற்பனை செய்தல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் கப்புகள், பாலிதீன் பைகள் பயன்படுத்தினாலோ, விற்பனை செய்தாலோ சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அபராதத்துடன் கூடிய தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு தடையை மீறி பயன்படுத்தினால் ரூ. 250 அபராதம் விதிக்கவும் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றனர்.