Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

எதிர்பார்ப்பு! குழந்தைகள் பெயரில் மரக்கன்று நடும் திட்டம் : சென்னையை பின்பற்றுமா திருப்பூர் மாநகராட்சி

Print PDF

தினமலர் 18.02.2010

எதிர்பார்ப்பு! குழந்தைகள் பெயரில் மரக்கன்று நடும் திட்டம் : சென்னையை பின்பற்றுமா திருப்பூர் மாநகராட்சி

"சென்னையில் அமல்படுத்தப் பட்டுள்ள குழந்தைகள் பெயரில் மரக்கன்று நடும் திட்டம், தொழில் நகரமான திருப்பூருக்கு மிக அவசியம்' என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சி மற்றும் மாவட்ட அந்தஸ்துடன் திருப்பூர் செயல்பட்டு வருகிறது. பனியன் கம்பெனிகள் நிறைந்த திருப்பூரில், வேலைவாய்ப்பு காரணமாக வெளிமாவட்ட மக்களும் குடியேறுவதால், மக்கள் தொகையும், நெருக்கமும் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

பனியன் தொழில் சார்ந்த சாயப் பட்டறை, சலவைத்தொழில் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பதாகவும், நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக் கின்றனர். மக்கள் தொகை பெருக் கத்தாலும் குப்பை மற்றும் சாக்கடை கழிவுகள் அதிகரித்துள்ளது. வாகனங்களின் அதிகரிப்பும் இயற் கையை பாதித்து வருகிறது. தொழில் வளர்ச்சியாலும், மக்கள் பெருக்கத் தாலும் சுற்றுச்சூழல் மாசுபடுவது தவிர்க்க முடியாததாகி விட்டது; இருப்பினும், கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் திருப்பூர் மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

இயற்கை மாசுபடுவதை தடுக்க, சென்னையில் பிறக்கும் குழந்தைகள் பெயரில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னை மாநகராட்சி துவக்கியுள்ளது. முதல்கட்டமாக 20 குழந்தைகள் பெயரில் மரக்கன்றுகள் நடவு செய்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கடந்த ஜன.,31 வரை, நகரில் பிறந்த 41,471 குழந்தைகள் பெயரில் மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன.

தொடர்ந்து, அந்தந்த வார்டில் பிறக்கும் குழந்தைகள் பெயரில், கவுன்சிலர் தலைமையில் மாதம் ஒருமுறை மரக்கன்றுகள் நடவு செய்யப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குச் சொந்தமான விளையாட்டு திடல்கள், கட்டட வளாகங் கள், பூங்காக்கள் மற்றும் மருத்துவ மனை வளாகங்களிலும் நாவல், புங்கை, பூவரசு மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

"தொழில் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக சுற்றுசூழல் பாதிப்பில் சிக்கியுள்ள திருப்பூரிலும், சென்னையில் அமல் படுத்தப்பட்டுள்ளது போல், குழந்தைகள் பெயரில் மரக்கன்று நடும் திட்டத்தை கொண்டுவர வேண்டும். 2,720 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட திருப்பூர் மாநகராட்சியில், ஒவ்வொரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும், மக்கள் பெருக்கத்தின் சதவீதம் அதிகரித்து கொண்டுதான் உள்ளது. கடந்த 2001ல் மூன்றரை லட்சத்தை தொட்ட திருப்பூர் மாநகராட்சியின் மக்கள் தொகை, 2011ல் கணக்கெடுப்பு நடத்தும் போது, ஐந்து லட்சத்தை கடந்து விடும். அதற்கேற்ப குழந்தைகள் பிறப்பு விகிதமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, குழந்தைகள் பெயரில் மரக்கன்று நடும் திட்டத்தை திருப்பூரில் அமல் படுத்தினால், இரண்டே ஆண்டில் திருப்பூரை பசுமை நகராக மாற்றி விடலாம்,' என்கின்றனர் சுற்றுசூழல் ஆர்வலர்கள்.
நடைமுறைப்படுத்துமா, மாநகராட்சி: நகராட்சியாக இருந்து மாநகராட்சி அந்தஸ்து பெற்றதை தொடர்ந்து, நகரை மேம்படுத்துவதற்கான முயற்சியில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. அரசின் நிதி உதவியை பெற்றும், மாநகராட்சியில் வசூலாகும் வரிப்பணத்தில் இருந்தும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நகரில் உள்ள ரோடுகளை அகலப்படுத்துவதற்காக, "சர்வே' பணிகள் நடந்துள்ளன. ரோடு விரிவாக்கத்திற்கு இடையூறாக இருக்கும் கட்டடங்களை இடிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாதாள சாக்கடை திட் டத்தை முழுமையாக செயல்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது.

பூமி வெப்பமயமாதல் பற்றியும், அதனால் ஏற்படும் எதிர்கால பாதிப்புகள் பற்றியும் அறிவியல் வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர். அத்தகைய எச்சரிக்கையை திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தொழில் வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கம், வாகன நெரிசல் போன்றவற்றை கருத்தில் கொண்டு, நகரின் கட்டமைப்பு வசதியை மேம் படுத்தும் மாநகராட்சி நிர்வாகம், குழந்தைகள் பெயரில் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தையும் கொண்டு வர வேண்டும்; அப்போதுதான், காற்றை சுத்தமாக்கி சுகாதாரத்தையும் பாதுகாக்க முடியும்.

Last Updated on Thursday, 18 February 2010 07:27