தினமணி 20.02.2010
ஏப். 1 முதல் பிளாஸ்டிக் தடைநாகர்கோவில், பிப். 19: கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்தார்.
நாகர்கோவில் ஆட்சியர்
அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் கோரிக்கை தினக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
விவசாயிகள் தங்களுடைய பம்புசெட் மின்மோட்டார்களைப் பழுது நீக்கம் செய்ய, கோணம் தொழிற்பேட்டையில் உள்ள கன்னியாகுமரி வேளாண்மை பொறியியல் மற்றும் சேவை கூட்டுறவு சங்கத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் விஜயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கியாம் கரம்தாஸ், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் சிறில் கிறிஸ்டோபர், கோட்டாட்சியர் நடராஜன், உதவி செயற்பொறியாளர் மலையரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.