Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க பிச்சாவரத்தில் கலந்துரையாடல்

Print PDF

தினமலர் 23.02.2010

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க பிச்சாவரத்தில் கலந்துரையாடல்

பரங்கிப்பேட்டை : கிள்ளை பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கிள்ளை பேரூராட்சி மற்றும் கிரீடு நிறுவனம் இணைந்து பிச்சாவரத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.பேரூராட்சி சேர்மன் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கிரீடு நடனசபாபதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பிச்சாவரத்தில் உள்ள சதுப்பு நிலக்காடுகளை பாதுகாக்க பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என எடுத்து கூறப்பட்டது.கூட்டத்தில் துணை சேர்மன் பரமதயாளன், சுற்றுசூழல் அதிகாரி திருநாவுக்கரசு, கவுன்சிலர்கள் சங்கர், கலா, கற்பனைச்செல்வம், பாண்டியன், ரவிச்சந்திரன், கிராம நிர்வாகிகள் பாஸ்கர், மலையரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 23 February 2010 07:14