தினமலர் 26.02.2010
பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பகுதியில் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., இளங்கோ தலைமையில் தாசில்தார் முருகேசன், நகராட்சி சுகாதார அலுவலர் பிரகாஷ், ஆகியோர் வேர்கோடு, பஸ் ஸ்டாண்டு கடைகளில் பிளாஸ்டிக் பைகள், கப்புகளை பறிமுதல் செய்தனர். பின் தாசில்தார் அலுவலகத்தில் ஓட்டல்கள்,வர்த்தக நிறுவனங்களில் உரிமையாளர்கள், தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ராமநாதசுவாமி கோயில் இன்ஜினியர் மயில்வாகணன், பாம்பன் ஊராட்சி தலைவர் முகம்மதுஹனிபா பங்கேற்றனர