தினமலர் 06.03.2010
பிளாஸ்டிக் கப்,பைகள் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை: திண்டுக்கல் நகராட்சி முடிவு
திண்டுக்கல்:திண்டுக்கல் நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் கப், பைகளை பயன் படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.திண்டுக்கல் நகராட்சி கூட்டம் தலைவர் நடராஜன் தலைமையில் நடந்தது.
நடந்த விவாதம் வருமாறு:
துணை தலைவர் கல்யாணசுந்தரம்: சொந்த கட்டடங்களில் சிறுதொழில் நடத்துபவர்கள் மீது வரி விதிக்கும் போது, தொழில் பாதிக்கும் வாய்ப்புள்ளது.
தலைவர்: இதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. சென்னை நகராட்சி இயக்குனரின் உத்தரவுப்படி சொத்து வரி நிர்ணயம் செய்யப்படும்.
ஜெயபாலன்: அரசு பணிமனையில் பழுதுபட்ட வாகனங்களை செப் பனிட வெவ்வேறு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அரசு நிர்ணயித்த தொகை என்ன.
தலைவர்: அரசு உத்தரவுப்படி வாகனங்கள் பராமரிக்கப்படுகிறது.
துணை தலைவர்: குப்பை தொட் டிகள் நகராட்சியில் பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில் 39 தொட்டிகளுக்கு 25 தொட்டிகள் மராமத்துக்கு எடுத்து சென்றால், மக்கள் எங்கே குப்பை கொட்டுவார்கள். சுகாதாரக்கேடு ஏற்படும்.
தலைவர்: குப்பை தொட்டிகளை அதே இடத்தில் வைத்து மராமத்து செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துணை தலைவர்: பாலதிருப்பதி சத்துணவு கூடத்தில் ஆரம்ப பள்ளியும் செயல்படுவதால் இட நெருக் கடி ஏற்பட்டுள்ளது. ஆர்.எம்., காலனி பகுதி இரண்டுக்கு இன்னும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை.
தலைவர்: நிதி ஒதுக்கீடு வந்தவுடன் சத்துணவுகூடம் மராமத்து செய்யப்படும்.
கோபாலகிருஷ்ணன்: ஆத்தூர் அணையில் உள்ள கிணறுகளில் சகதிகள் அகற்றி அனைத்து பகுதிக்கும் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும்.
தலைவர்: ஆத்தூர் அணையில் உள்ள கிணறுகளில் சகதி அகற்றப் பட்டு, தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். பேரணை திட்டத்தின் மூலம் விரைவில் குடிநீர் சப்ளை தொடங்கும்.
ஜெயபாலன்: நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் கப்,கேரி பேக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும். அப்படி விதிக்கும் போது தொழிலாளர்களுக்கு சிறிது காலம் அவகாசம் தர வேண்டும்.தலைவர்: பிளாஸ்டிக் கப்பில் சூடான பானங்கள் குடிக்கும் போது நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. வரும் 15 நாட்களுக்குள் நகராட்சி பகுதிக்குள் யாரும் பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்தக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக் கப்படும். தலைவரின் இந்த தீர்மானத்திற்கு அனைத்து கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர்.