தினமணி 12.04.2010
பாலித்தீன் பைகள் பறிமுதல்
பெரியகுளம், ஏப். 11: உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, பெரியகுளம் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும் கேரி பைகள் சுமார் 100 கிலோ அளவுக்குப் பறிமுதல் செய்யப்பட்டு, நகராட்சி உரக் கிடங்கில் புதைக்கப்பட்டன. நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மோனி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் அகமது கபீர், ஜெயசீலன் மற்றும் பணியாளர்கள் இப் பணியில் ஈடுபட்டனர்.