Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பொருட்கள் அப்புறப்படுத்தும் பணி என்.எல்.சி., நிர்வாக இயக்குனர் துவக்கி வைத்தார்

Print PDF

தினமலர் 23.04.2010

பிளாஸ்டிக் பொருட்கள் அப்புறப்படுத்தும் பணி என்.எல்.சி., நிர்வாக இயக்குனர் துவக்கி வைத்தார்

நெய்வேலி: பொது இடங்களில் வீசப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளை சேகரித்து அகற் றும் பணியியை என். எல்.சி. நிர்வாகத் துறை இயக்குநர் பாபுராவ் துவக்கி வைத்தார். நெய்வேலி டவுன்ஷிப் பகுதிகளில் சுற்றுப்புற சூழலை பராமரிப்பதற் காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிளாஸ் டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவிற்கு நெய்வேலி நகர பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் ஒத்துழைப் போடு செயல்படுத்தப் பட்டு வரும் நிலையில் அடுத்த கட்டமாக பொது இடங்களில் பயன்படுத் திய பின் வீசியெறியப் பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள், தண்ணீர் பாக் கெட்டுகள் மற்றும் மக்காத மெல்லிய பிளாஸ்டிக் பேப்பர் போன்றவற்றை சேகரித்து அப்புறப்படுத் தும் பணியை என்.எல்.சி., நிர்வாகத்துறை இயக்குநர் பாபுராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பிளாஸ்டிக் பைகளை சேகரிக்கும் சிறப்பு பணியில் என். எல்.சி., நிறுவனம் சுகாதாரத் துறை பணியாளர்கள், நெய்வேலி மக்கள் சேவை பிரிவு, ஈஷா யோகா, சுய உதவிக் குழுக்கள், தன் னார்வ அமைப்பு தொண் டர்கள் மற்றும் நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் சுற்றுச் சூழல் அறிவியல் படித்துவரும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 23 April 2010 06:32