தினமணி 26.04.2010
ஆரல்வாய்மொழியில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்
நாகர்கோவில், ஏப். 25: ஆரல்வாய்மொழியில் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்திய 2 கடைகளுக்கு சனிக்கிழமை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
மாவட்டத்தில் பிளாஸ்டிக் பை, கப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவோர் மீது ஆட்சியர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆரல்வாய்மொழி பகுதிகளில் உள்ள கடைகளில் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பாராஜ் மற்றும் பேரூராட்சிப் பணியாளர்கள் சோதனை நடத்தினர்.
சோதனையில், ஹோட்டல், பேக்கரி கடைகளில் பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2 கடைகளில் இருந்த 20 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளுக்கு தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.