Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் குப்பையில்லாத கரூர் நகராட்சி கமிஷனரின் முயற்சிக்கு கவுன்சிலர்கள் ஆதரவு

Print PDF

தினமலர் 29.04.2010

பிளாஸ்டிக் குப்பையில்லாத கரூர் நகராட்சி கமிஷனரின் முயற்சிக்கு கவுன்சிலர்கள் ஆதரவு

கரூர்: கரூர் நகராட்சியில் பிளாஸ்டிக் குப்பையில்லாத பகுதியாக மாற்ற முதற்கட்ட நடவடிக்கை துவங்கப்பட தீர்மானிக்கப்பட்டது. கரூர் நகராட்சி சாதாரண கூட்டம், தலைவர் சிவகாமசுந்தரி தலைமையில் நடந்தது. கமிஷனர் ரகுபதி, துணை தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவை: திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் சிறப்பாக செயல்படுத்த குப்பையில் பிளாஸ்டிக் கழிவு, பாதாள சாக்கடையில் பிளாஸ்டிக் 'கப்' அடைத்துக்கொள்வதால், சீர்செய்ய முதற்கட்டமாக பிளாஸ்டிக் 'கப்' பயன்பாடு தடை செய்யப்படுகிறது. தற்போது நகராட்சி பகுதி கடைகளில் உள்ள பிளாஸ்டிக் 'கப்' அனைத்தும் மே 31ம் தேதிக்குள் விற்பனை செய்ய அவகாசம் அளிக்கப்படுகிறது. ஜூன் முதல் தேதியில் இருந்து விற்பனைக்கு வைத்திருக்கும் பிளாஸ்டிக் 'கப்' அனைத்தும் முன்னறிவிப்பு இன்றி பறிமுதல் செய்யப்படும். விழாக்காலங்களிலும் பிளாஸ்டிக் 'கப்' கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது என்று தீர்மானிக்கப்பட்டது.கரூர் பஸ் ஸ்டாண்டை சுத்தமாக, தூய்மையாக வைத்திருக்க சுய உதவிக்குழுவை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது. பொன்விழா நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் உருவாக்கப்பட்ட குழுவினர், கலெக்டர் நிர்ணயித்துள்ள கூலி தொகை அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளனர். காலை ஆறு முதல் பகல் 12 மணி வரையிலும், பகல் 12 முத ல் மாலை ஆறு மணிவரையிலும் 10 பேர் கொண்ட இரண்டு குழுக்களாக, பஸ் ஸ்டாண்டை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு தனி சீருடை அளிக்கப்படும். திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில், வடக்கு பக்கம் உள்ள பாழடைந்த கட்டிடத்தை இடித்து, மைதானத்தை சுற்றிலும் நடைப்பயிற்சி களம் மக்கள் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

நகராட்சிக்கு சொந்தமான கலவை உரக்கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரம் தயாரிக்க 'வின்ட்ரோ ஸ்' அமைக்கப்பட்டுள்ளது. இத ற்கு கலவை உரம் தயாரிக்க தண்ணீர் தேவைப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட பாதாள சாக்கடை கழிவுநீரை குழாய் மூலம் உரக்கிடங்கில் கட்டப்படும் ஆறாயிரம் லிட்டர் கொள்ளவு மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் சேகரித்து பயன்படுத்தப்படும்.

குழாய் மற்றும் தொட்டிக்கு 16 லட்சம் ரூபாய் செலவு மதிப்பிடப்பட்டுள்ளது. 5.75 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் தேவைக்கு இரண்டு ஆழ்குழாய் கிணறு அமைத்து நான்காயிரம் லிட்டர் கொள்ளவு தொட்டியில் சேகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நகராட்சி அலுவலக கட்டிட வளாகத்தில் மேற்கு பகுதியில் காலியிடத்தில் ஏழு கடைகள் கட்டுவதற்கு 17.5 லட்சம் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. இக்கடைகளை வைப்புத்தொகை ஏலம் மூலம் அளிக்கப்படும். மாதவாடகையாக 750 ரூபாய் நிர்ணயிக்கப்படும். மினி பஸ் ஸ்டாண்டின் வடக்கு பகுதியில் காலியாக உள்ள இடத்தில் குப்பை கொட்டப்படுவதை தவிர்க்க, இங்கு 23 லட்சம் மதிப்பில் 14 கடைகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்படும் தற்காலிக கடைகளுக்கு அனுமதி கட்டணம் குறித்து கூட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டது. நான்கு சதுர அடிக்கடைகளுக்கு 30 நாட்களுக்கு 600 ரூபாய் எனவும், 10 சதுர அடி கடைகளுக்கு 40 நாட்களுக்கு ஆயிரத்து 600 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டத

தலைவர் மீது பெண் கவுன்சிலர் ஆவேசம்: 35ம் வார்டு கவுன்சிலர் பரமேஸ்வரி(தி.மு.க.,) தன்னுடைய பகுதி பிரச்னை குறித்து பேசுகையில், ''எங்கள் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெயர் மாற்றம் குறித்து நகராட்சி அலுவலகத்தில் கேட்டபோது, அலுவலர்கள் சிலர் அவமரியாதையாக பேசினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் குழாயில் கழிவு நீர் கலப்பது குறித்து புகார் அளிக்கப்பட்டு 10 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை. அதே போல் சிமென்ட் சாலை போடப்பட்டதும், ழுமையாக முடிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது,'' என்றார். 'மிரட்டுவது போல் பேசக்கூடாது. தனிப்பட்ட முறையில் வந்தால், செய்து தருகிறேன்' என்று தலைவர் சிவகாமசுந்தரி (தி.மு.க.,) கூறினார். 'நான் நின்றுகொண்டே இருக்கிறேன், என் கோரிக்கை எதற்கும் நடவடிக்கையும் இல்லை, பதிலும் தரவில்லை,' என்று மீண்டும் பரமேஸ்வரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மற்ற கவுன்சிலர்கள் தலையிட்டு அமைதி ஏற்படுத்தினர்.

Last Updated on Thursday, 29 April 2010 06:11