தினமலர் 03.05.2010
விழுப்புரம் நகராட்சி முழுவதும் 4ம் தேதி மரக் கன்றுகள் நடப்படும் : சேர்மன் ஜனகராஜ் அறிவிப்பு
விழுப்புரம் : விழுப்புரம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முன் னாள் (2008-09ம் ஆண்டு) மாணவர்கள் சந்திப்பு மற்றும் அரோரா அமைப்பு துவக்க விழா நடந்தது.
விழுப்புரம் ஆசான் திருமண மண்டபத்தில் நடந்த விழாவில் கிராமப்புற மாணவர்களின் கல்வி மேம்பாட்டு வளர்ச்சிக் கான அரோரா அமைப்பு துவக்கப்பட்டது. அமைப் பின் செயலாளர் நவீன் குமார் வரவேற்றார். நிறுவனர் பிரணவ்குமார் தலைமை தாங்கினார். தலைவர் சிவராஜ், முன் னாள் மாணவர் கிருஷ்ணமூர்த்தி, உடற்கல்வி இயக் குனர் மோகனசுந்தரம், லயன்ஸ் சங்க தலைவர் தனபால் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சேர்மன் ஜனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், நான் கல்லூரியில் படிக் கும் போது இந்த சமுதாயத்திற்காக நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. என்னுடன் படித்தவர்கள் ஐந்து பேர் விஞ்ஞானிகளாகவும், 4 பேர் தொலை பேசி நிறுவனத்திலும் பணியாற்றுகின்றனர். அவர்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது கல்விதான். முன்னாள் மாணவர்களாகிய நீங்கள் மற்ற மாணவர்களுக்கும் நல்லதை செய்ய வேண் டும். அதற்கு நீங்கள் முதலில் வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும்.
ஏழை எளிய மக்களுக்கு நல்லதை செய்ய வேண் டும். சமுதாய தொண் டாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அரசியலுக்கு வந்த பின்புதான் வந்தது. நீங்கள் அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெற்று ஒவ்வொருவரும் ஒரு மாணவனை படிக்க வைக்க வேண்டும். விழுப் புரம் நகராட்சியுடன் அரோரா இணைந்து செயல் படுவதன் மூலம் வரும் 4ம் தேதி நகரம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடத்தப்படும். பள்ளி, கல்லூரி மாணவர் கள் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதால் அவர் களுக்கு நல்ல எண்ணங் கள் உருவாகும் என்றார்.