தினமலர் 14.08.2012
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
இதுகுறித்து, ஆங்காங்கே விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகைகள் வைக்கப் பட்டு உள்ளன. மேலும், அரசுப் பள்ளி மாணவியரின் விழிப்புணர்வு பேரணியும் நேற்று நடந்தது. பேரணியை பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் துவக்கி வைத்தார்.பெண்கள் பள்ளியில் துவங்கிய பேரணி, பஜார் வீதி வழியாக சென்று பேரூராட்சி அலுவலகத்தில் முடிந்தது. பேரணியில் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், மண் வளம் காப்போம் போன்ற பதாகைகளை ஏந்திக் கொண்டு மாணவியர் சென்றனர். இதில், துணைத் தலைவர் ஷேக்தாவூத் மற்றும் கவுன்சிலர்கள், பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.