Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் ஒழிப்பு மனித சங்கிலி பேரணி

Print PDF

தினகரன்   07.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு மனித சங்கிலி பேரணி

தொட்டியம்,: தொட் டியம் தாலுகா காட்டுப்புத்தூர் பேரூராட்சி சார் பில் பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி நடந்தது. செயல் அலுவ லர் இளங்கோவன் முன் னிலை வகித்தார். காட்டுப்புத்தூர் பஸ் நிலையம் முன் துவங்கிய மனித சங் கிலி பேரணியை பேரூரா ட்சி தலைவர் பரமேஸ்வரி துவக்கி வைத்தார். காட்டுப்புத்தூர் மேற்கு அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பங் கேற்று பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழி ப்பு பதா கைகளை கையில் ஏந்தி சென்றனர். பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர் கள் குணசேகரன், கோகி லா, சேகர்  பங்கேற்றனர்

 

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினகரன்   07.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சோமனூர், : கருமத்தம்பட்டி பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத நகரை அமைப்போம் என்ற லட்சியத்தோடு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் மகாலிங்கம் தலைமையில் நேற்று நடந்தது.  கருமத்தம்பட்டியில் உள்ள புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 300க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  பிளாஸ்டிக் உபயோகத்தினால் ஏற்படும் கேடுகள் குறித்து விளக்கும் பதாகைகளை ஏந்திக் கொண்டு வந்தனர். பள்ளியிலிருந்து தொடங்கிய ஊர்வலம், காவல்நிலையம், நால்ரோடு வழியாக சோமனூர் ரோடு பகுதிகளில் நடந்தது.

பேரணிக்கு கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சிவசாமி, துணை தலைவர் தங்கமணி மற்றும்  கவுன்சிலர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்கள் விநியோகித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். கருமத்தம்பட்டி நால்ரோட்டில் உள்ள அனைத்து கடைகளுக்கும் 40 மைக்ரான் வரை தடிமன் உள்ள பிளாஸ்டிக் பைகளை  முற்றிலும் தவிர்க்க வேண்டும். மீறி பயன்படுத்தினால் பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை மற்றும் கையாளுதல் விதி 2011ன் படி பிளாஸ்டிக் பயன்படுத்துவோர் மீது முதல்கட்டமாக ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பிரின்ஸ் ஹென்ரே, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

"பிளாஸ்டிக்' விழிப்புணர்வு

Print PDF

தினமலர்          07.08.2012

"பிளாஸ்டிக்' விழிப்புணர்வு

கூடலூர் : தேவர்சோலை நகரில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி, மனித சங்கிலியாக நின்று, மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கூடலூர் தேவர்சோலை நகரில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி தேவர்சோலை பேரூராட்சி சார்பில், நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பேரூராட்சி அலுவலகத்தில் துவங்கிய பேரணிக்கு பேரூராட்சி தலைவர் சபியாகோயா தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

பேரணியில், ஊராட்சி பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் எதிர்ப்பு போர்டுகளை கையில் ஏந்தி, கோஷங்களை எழுப்பினர். பேரணி, பஸ் ஸ்டாண்ட், ஊராட்சி துவக்கப்பள்ளி வழியாக சென்றனர். பின்னர், நகர சாலையில் மாணவ, மாணவியர் இணைந்து மனித சங்கிலியாக நின்று பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில், பேரூõட்சி துணை தலைவர் வேலாயுதம் மற்றும் கவுன்சிலர்கள், தலைமை எழுத்தர் வேணு, ஊழியர்கள், தேவர்சோலை ஊராட்சி ஒன்றிய பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

 


Page 41 of 135