தினமணி 03.08.2012
குடந்தையில் பாலீத்தீன் பைகள் பறிமுதல்
தஞ்சாவூர், ஆக. 2: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகரில் நகராட்சி அலுவலர்கள் வியாழக்கிழமை பாலீத்தீன் பைகள், தேநீர் கப்புகளை பறிமுதல் செய்தனர். கும்பகோணம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பாலீத்தீன் பைகளுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கு தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் சாக்கடையில் சிக்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நகர்மன்றத் தலைவர் ரத்னாசேகர் உத்தரவுப்படி கும்பகோணம் நகரில் நாகேசுவரன் திருமஞ்சனவீதி, பொற்றாமறைக்குளம், பெரியதெரு, பெரிய கடைவீதி, நாகேசுவரன் வடக்குவீதி உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் நகராட்சி பொறியாளர் பாண்டுரெங்கன் தலைமையில் சோதனை நடத்தினர். இதில், ரூ. 5,000 மதிப்புள்ள பாலீத்தீன் பைகள், தேநீர் கப்புகளை பறிமுதல் செய்து அழித்தனர்.