Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Print PDF

தினமணி                 01.08.2012

மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

கடலூர், ஜூலை 31: கடலூர் மீன் மார்க்கெட்டில் விதிமுறைகளை மீறி பயன்படுத்திய கேரி பேக் மற்றும் ஒரு முறைப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி ஊழியர்கள் அண்மையில் பறிமுதல் செய்தனர்.

 ÷கடலூர் மாவட்டத்தில் ஒருமுறைப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்து வருகிறது.

 ÷இது தொடர்பாக பேரணி, விழிப்புணர்வு, பூஜ்ஜிய கழிவு மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பயிற்சி என மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டைத் தடுக்க முயற்சி எடுத்து வருகிறது.

 ÷இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் கடலூர் பஸ் நிலையத்துக்குச் சென்று துணிப்பையை பயன்படுத்தி பொருள்கள் வாங்கினர். மேலும் அங்கிருந்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 ÷ஒருமுறைப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்ய வேண்டும், பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என தீவிரம் காட்டி வரும் அதே வேளையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதன் பயன்பாடு குறையவில்லை.

 ÷கடலூர் திருப்பாப்புலியூர் மீன் மார்க்கெட்டில் கடலூர் நகராட்சி சுகாதாரத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

 ÷அப்போது மீன் கடையில் பயன்படுத்தப்பட்ட ஒரு முறைப் பயன்படுத்தப்படும் கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர்.

 

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு போட்டி

Print PDF

தினமலர்      01.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு போட்டி

லாலாப்பேட்டை: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்த போட்டிகள் தொடக்க விழா நடந்தது.போட்டியை டவுன் பஞ்சாயத்து தலைவர் சரோஜா தொடங்கி வைத்தார். கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகளில் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த அரசு பள்ளிகள், கோவக்குளம் அரசு நடுநிலைப்பள்ளி, பிச்சம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி, கோவகுளம் கே.எஸ்.ஆர்.வி., மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 75 மாணவ, மாணவிகள் பேர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் டவுன் பஞ்சாயத்து சார்பில் வழங்கப்பட்டது. துணைத்தலைவர் சசிக்குமார், செயல் அலுவலர் முகமது யூசுப் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
Last Updated on Wednesday, 01 August 2012 05:56
 

பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி கலெக்டர் துவக்கி வைப்பு.

Print PDF

தினமலர்      01.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி கலெக்டர் துவக்கி வைப்பு.

கரூர்: கரூரில்  பிளாஸ்டிக்  ஒழிப்பு  மற்றும் டெ ங்கு   காய்ச்சல்  விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கரூர் நகராட்சி  அலுவலகத்தில்  இருந்து  துவங்கிய  பேரணியை கலெக்டர்

÷ஷாபனா கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற கரூர் சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு விநியோகித்தனர்.

நகராட்சி   தலைவர்   செல்வராஜ்,  துணைத்தலைவர்   காளியப்பன்,   சுகாதாரப்பணிகள்   இணை இயக்குனர்  உமேஸ்வரி,  மருத்துவப்   பணிகள்   துணை   இயக்குனர்   சம்பத்குமார்,   நகராட்சி கமிஷனர்  ரவிச்சந்திரன்,  கவுன்சிலர்கள்   விசாகன்,  தானேஷ்,  லட்சுமண  மூர்த்தி,   தமிழரசி, கோபால கிருஷ்ணன் உள்பட பலர் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.

 


Page 46 of 135