Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்

Print PDF

தினமணி               28.07.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்

பெரியகுளம்,ஜூலை 27: பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவர் கே. குணசேகரன் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி.ஆர். ராஜேந்திரன், செயல் அலுவலர் எஸ்.டி. கணேசன், கவுன்சிலர்கள், காய்கறிக்கடை உள்பட பல்வேறு தரப்பட்ட வியாபாரிகள், திருமண மண்டப உரிமை யாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பைகள், கேரி பேக்குகள், பிளாஸ்டிக் டீ கப்புகள் மற்றும் தணணீர் பாட்டில்கள் ஆகியவற்றால் ஏற்படும் சுகாதாரக் கேட்டினைத் தவிர்க்கும் பொருட்டு, பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவை கடந்த 16.7.12-ம் தேதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இதனை மீறி விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ நடவடிக்கை மேற்கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனவே பேரூராட்சி மன்ற தீர்மானப்படி, விற்பனையாளர்கள் மற்றும் உபயோகிப்பாளர்கள் ஆகியோரிடம் அபராதக் கட்டணமாக ரூ 100 முதல் 500 வரை வசூல் செய்வது என்றும், மேலும் குடியிருப்புகள், அலுவலகங்கள், வியாபார நிறுவனங்கள், உணவு விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் இருந்தும் தன்னிச்சையாக தெருக்களில் குப்பைகளை கொட்டுவோரிடம் அபராதக் கட்டணமாக ரூ 100 முதல் 1000 வரை வசூல் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

எனவே பிளாஸ்டிக் கழிவு இல்லாத பேரூராட்சியாக உருவாக்கவும், இப் பேரூராட்சி பகுதியில் பொது சுகாதாரத்தைப் பேணி பாதுகாக்கவும் பொதுமக்கள், வியாபாரிகள், அலுவலர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

விழிப்புணர்வுப் பேரணி

Print PDF

தினமணி               28.07.2012

விழிப்புணர்வுப் பேரணி

பண்ருட்டி, ஜூலை 27: பண்ருட்டி நகராட்சி சார்பில் மாபெரும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடத்தது. பண்ருட்டி நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியில் பண்ருட்டி நகர பகுதியைச் சேர்ந்த 22 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு, பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு பதாகைகளை ஏந்தி மூக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் நகராட்சி அலுவலகத்தை அடைந்தனர்.

 ஆணையர் உமாமகேஸ்வரி, சுகாதார அலுவலர் பி.குமார், ஆய்வாளர்கள் க.பாண்டியன், நா.திண்ணாயிரமூர்த்தி, நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள், ரோட்டரி, ரோட்ராக்ட், இன்னர்வீல், லயன், எக்ஸ்னோரா மற்றும் வியாபார சங்கத்தினர் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

 

பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

Print PDF

தினமணி               27.07.2012

பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

அவிநாசி, ஜூலை 26: திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் பிளாஸ்டிக் பைகளை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வுக் கூட்டம், காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருமுருகன்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகோபால் தலைமை வகித்தார். "ஹேண்ட் அன்ட் ஹேண்ட்' தொண்டு நிறுவனம் சார்பில், சுற்றுச்சூழல் மாசுபடுவதால் ஏற்படும் தீமைகளையும், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் குறும்படம் மூலமாக விளக்கப்பட்டது.

பிளாஸ்டிக் பைகளை அரசு விதிமுறைகளை மீறி பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதமும், நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.இதில் பேக்கரி, உணவகம், டீ கடைகள், மளிகை வியாபாரிகள், சிறு வியாபாரிகள், திருமண மண்டப உரிமையாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

 


Page 48 of 135