Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

Print PDF

தினமலர்       26.07.2012   

 பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

வேலாயுதம்பாளையம்: புன்செய் புகளூர் டவுன் பஞ்சாயத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் காந்தி திருமண மண்டப்பத்தில் நடந்தது.

கூட்டத்தில் 40 மைக்கிரான் அளவு குறைவாக  உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து டவுன் பஞ்சாயத்து தலைவர் லலிதா விளக்கம் அளித்து பேசினார். துணைத்தலைவர் கவுசல்யாதேவி, செயல் அலுவலர் சுப்ரமணியம், வியாபாரிகள், வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

 

பிளாஸ்டிக்' ஒழிப்பு நடவடிக்கைக்கு வியாபாரிகள் ஆதரவு

Print PDF

தினமலர்       26.07.2012   

பிளாஸ்டிக்' ஒழிப்பு நடவடிக்கைக்கு வியாபாரிகள் ஆதரவு

கூடலூர்:"தேவர்சோலை நகராட்சியின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்,' என வியாபாரிகள் உறுதியளித்துள்ளனர்.கூடலூர் தேவர்சோலை பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்து பேசுகையில்,""நாம் பயன்படுத்தி வீசும் பிளாஸ்டிக் கழிவுகளால் மண்ணுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பல்வேறு பாதிகள் ஏற்படுகிறது.

இதன் பயன்பாட்டை தடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் சுற்றுச் சூழல் பாதிப்பை பாதுகாத்து நம்மையும் காத்துகொள்ள முடியும். பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க பொதுமக்கள் வியாபாரிகளும் ஒத்தழைப்பு வழங்க வேண்டும்,'' என்றார். இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக வியாபாரிகள் உறுதியளித்தனர். கூட்டத்தில், துணை தலைவர் வேலாயுதம் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் சபியா தலைமை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், வியாபாரி சங்க தலைவர் ரவீந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்­டனர்.

 

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

Print PDF

தினமலர்                         25.07.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

தென்காசி : மேலகரம் டவுன் பஞ்.,சில் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.மேலகரம் டவுன் பஞ்., பகுதியில் மேலகரம், என்.ஜி.ஓ.,காலனி, ஸ்டேட் பாங்க் காலனி, பாரதிநகர், மின் நகர், நன்னகரம், குடியிருப்பு, இந்திராநகர் பகுதியில் ஓட்டல்கள் மற்றும் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் மத்தியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாய நலக்கூடத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு டவுன் பஞ்.,தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி சுந்தரராஜன் முன்னிலை வகித்தார்.பிளாஸ்டிக் பயன்பாட்டால் மக்களுக்கு பல்வேறு தீமைகள் பற்றியும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் ஆபத்து குறித்தும், கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது குறித்தும், மக்களுக்கு கேன்சர் வர வாய்ப்பு இருப்பது பற்றியும் டவுன் பஞ்., தலைவர் பாலசுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.

பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்தினால் அபராதம் விதிப்பது குறித்து டவுன் பஞ்., நிர்வாக அதிகாரி சுந்தரராஜன் கூறினார். பொதுமக்கள் கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும் போது துணி பை கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வார்டுகள் தோறும், வீதிகள் தோறும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடத்தவும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் கவுன்சிலர்கள் சின்னத்துரை, இசக்கியாபிள்ளை, பாலகிருஷ்ணன், சிங்கத்துரை, செண்டு அம்மாள் மற்றும் வியாபாரிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

 


Page 51 of 135