Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

"கேரிபேக்' விற்பனையா 100 கடைகளில் சோதனை : நாளை முதல் மதுரையில் தடை

Print PDF

தினமலர்              31.12.2010

"கேரிபேக்' விற்பனையா 100 கடைகளில் சோதனை : நாளை முதல் மதுரையில் தடை

மதுரை : மதுரை நகரில் 20 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள "கேரிபேக்குகள்' விற்கப்படுகிறதா என, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், பிளாஸ்டிக் கப் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கடைகளில் சோதனை நடத்தினர். மதுரை மாநகராட்சி பகுதிகளில், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் 20 மைக்ரான் தடிமனுக்குஉட்பட்ட கேரிபேக்குகளை விற்பதற்கான தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இது தொடர்பாக, நேற்று முன் தினம் மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டினை சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து என்னென்ன பொருட்களை தடைசெய்ய முடியும் என்பது குறித்து விளக்கம் அளித்தனர். பின், கடைகளில் சங்க நிர்வாகிகள் சோதனை நடத்தினர். இதில், தடைசெய்யப்பட்ட ஐந்து கிலோ கேரிபேக் பறிமுதல் செய்யப்பட்டது. ராதாகிருஷ்ணன் கூறுகையில், ""இதுவரை 100 கடைகளில் சோதனை நடத்தியுள்ளோம். தடைசெய்த கேரிபேக்குகளை விற்கக்கூடாது என, ஏற்கனவே கடை உரிமையாளர்களிடம் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கியுள்ளதால், நகரில் 20 மைக்ரான் தடிமனுக்குட்பட்ட கேரிபேக் விற்பது கிடையாது. பறிமுதல் செய்த கேரிபேக்கை, கம்பெனிகளுக்கே திருப்பி அனுப்பும்படி அறிவுறுத்தி உள்ளோம்,'' என்றார்.

 

பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்த தடை:சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமலர்     22.12.2010

பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்த தடை:சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூட்டத்தில் முடிவு

கோவை: ""மாநகராட்சி எல்லைக் குட்பட்ட திருமண மண்டபங்கள், உணவகங்களில் பிளாஸ்டிக் டம்ளர் பயன்படுத்தக்கூடாது,'' என, மாநகராட்சியில் நடந்த சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை மாநகராட்சி சுற்றுப்புறசூழல் பாதுகாப்பு கூட்டம் நடந்தது. மேயர் வெங்கடாசலம் தலைமை வகித்தார், துணை கமிஷனர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர், தட்டு, கேரிபேக் போன்றவற்றை உற்பத்தி செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை கொள்முதல் செய்து, அதை சிறு வியாபாரிகளுக்கு சில்லறையில் விற்பனை செய்து, பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதை தவிர்க்க வேண்டும். சாக்கடை கால்வாய், குளக்கரைகளில் இறைச்சி கழிவுகளை கொட்டும் வியாபாரிகள் மீதும், கட்டடக்கழிவுகளை குளக்கரையில் கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் தேங்காத வகையில் சுகாதார பணியாளர்களை கொண்டு பணிகளை முடுக்கிவிட வேண்டும். நகரிலுள்ள பொதுக்கழிப்பிடங்களை காலை, மாலை இரு நேரமும் சுத்தம் செய்ய வேண்டும். கொசுக்களும், ஈக்களும் வராத வகையில் தடுப்பு மருந்து தெளிக்க வேண்டும்.நகரிலுள்ள திருமண மண்டபம் மற்றும் உணவகங்களில் பிளாஸ்டிக் தட்டு, டம்ளர்களை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக பேப்பர் கப்,தட்டுக்களை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். பின்பற்றாதவர் மீது நகர்நலத்துறை அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.தெருவோர டிபன் கடைகள், பேல் பூரி ஸ்டால்களில் பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்துவதை தவிர்க்க சுகாதார ஆய்வாளர்களை கொண்டு பணிகளை முடுக்கிவிட முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில், பங்கேற்ற கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் கூறியதாவது: மாதம்தோறும் சுற்றுப்புற சூழல் பாதுகாப்புக்குழு கூட்டம் என்ற பெயரில் கூட்டத்தை மட்டும் கூட்டி. அதிகாரிகளை வரவழைக்கின்றனர். இது வரை ஐந்து கூட்டம் நடந்து விட்டது. தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகிறது. எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. பிளாஸ்டிக் ஒழிப்பு என்று மேயர் பதவி ஏற்றது முதல் சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஐந்து ஆண்டுகளும் முடிவடையப்போகிறது. எதுவும் நடக்கவில்லை.நகர்நலத்துறையில், முன்பிருந்த அதிகாரிகளாவது கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தனர். தற் போது எதுவும் நடப்பதில்லை. இதே நிலை நீடித்தால், கோவை மக்களின் சுகாதாரம், சுற்றுச்சூழல் கேள்விக்குறியாகிவிடும்.இவ்வாறு அவர்கள் கூறினர். கூட்டத்தில், மாநகராட்சி நகர் நல அலுவலர் ஹரிகிருஷ்ணன், உதவி நகர் நல அலுவலர் அருணா, சுற்றுச்சூழல் அமைப்புகளை சேர்ந்தவர்கள், தன்னார்வ அமைப்பினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் : தாந்தோணியில் தடை செய்யப்பட்ட நகராட்சி, மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF
தினகரன்       16.12.2010

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் : தாந்தோணியில் தடை செய்யப்பட்ட நகராட்சி, மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை

கரூர், டிச.16: தாந்தோணி நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மக்காத பிளாஸ்டிக் பைகள், கப்புகள் போன்ற பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதால் தாந்தோணி நகராட்சியில் பிளாஸ்டிக் பொரு ட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விற்பனை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தவும் நேற்று நகராட்சி சுகாதாரப் பிரிவி னர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சார்பில் நகராட்சி பகுதியில் உள்ள ஹோட்டல்கள், பல்பொருள் அங்காடிகள், பேக்கரிகள், சிறு வியாபார நிறுவனங்கள் ஆகியவற்றில் திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது, மறுசுழற்சிக்கு கடினமாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ, உபயோகிக்கவோ கூடாது என வியாபாரிகளிடம் தெரிவித்தனர். மேலும், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர். தாந்தோணி, காந்திகிராமம் பகுதியில் சோதனை நடத்தியதுடன் பொதுமக்களிடமும் பிளாஸ்டிக்கினால் ஏற்படுகின்ற தீமைகளை விளக்கினர். கறுப்பு, வெள்ளை மற்றும் பல கலர்களில் உள்ள பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களைக் கேட்டுக்கொண்டனர்.

நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் சதீஸ் சாய்நாத் மற்றும் நகராட்சி அலுவலர்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் இந்த ஆய்வினை நடத்தினர். சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்த வேண் டாம் என கேட்டுக்கொண்டனர்.

இதுகுறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் சதீஸ்சாய்நாத் கூறுகையில், எதிர் கால சந்ததியினருக்காக உலக நாடுகள் சுற்றுச்சூழ லை பாதுகாப்பதில் முன்னு ரிமை கொடுத்து வருகின் றன. சுற்றுச்சூழலை பாதுகாத்தால் மட்டுமே இயற்கை அன்னையை சாவின் விழிம் பில் இருந்து நாம் காப்பாற்ற முடியும். இதை உணர்த்தவே இதுமாதிரியான விழிப்புணர்வை மாவட்ட சுற்றுச்சூழல் துறை மூலம் ஏற்படுத்தியுள்ளோம். 20 மில்லி மைக்ரான் தடிமனுக்கு கீழே உள்ள பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தும் போது அவற்றை மறு சுழற்சி செய்ய முடியாது. மேலும், அவை பூமிக்கு அடியில் மக்காத குப்பையாக இருந்து மழைநீரை பூமிக்குள் செல்ல தடை விதித்து நிலத்தடி நீரோட்டத்தை பாதிக்கின்றன. ஏற்கனவே, நீரோட்டம் 100 அடிக்கு கீழே சென்று ள்ள நிலையில் இதுபோன்ற பிளாஸ்டிக்கினால் மேலும், நீரோட்டம் தடைபட்டு நாளடைவில் நகர் பகுதியில் தண்ணீரே கிடைக்காத நிலை ஏற்படும் என்றார்.
 


Page 53 of 135