Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

மறு சுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் தயாரித்தால் அபராதம்; தர்மபுரி நகராட்சி அறிவிப்பு

Print PDF

தினகரன்          09.12.2010

மறு சுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் தயாரித்தால் அபராதம்; தர்மபுரி நகராட்சி அறிவிப்பு

தர்மபுரி, டிச.9: தர்மபுரி நகரமன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. ஆணையாளர் அண் ணா துரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகரமன்றத்தலைவர் ஆனந்தகுமார் தலைமை தாங்கி பேசியதாவது:

தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கும் சாலை வசதி மேம்படுத்த அரசு ரூ5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் கடந்த மாதம் நடந்த கூட்டத் தொடரில் ரூ2 கோடி ஒப்புதல் பெறப்பட்டது. தற்போது ரூ3 கோடிக்கு ஒப்புதல் பெறப்படுகிறது. தர்மபுரி நகராட்சி பகுதியில் 6&க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் வகையில் தயாரிக்க வேண்டும். இல்லையென்றால் ரூ5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் சிறுவணிகர்களுக்கு ரூ500 அபராதம் விதிக்கப்படும். ஆறுமுகஆசாரிதெரு, சின்னசாமி நாயுடு தெரு, முகமதுஅலி கிளப் சாலைகள் சுமார் 2 அடி உயரத்துக்கு மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த சாலைகளையொட்டி ரூ75 லட்சத்தில் மழைநீர் வழிந்து ஓட நவீன சாக்க டை கால்வாய் ஏற்படுத்தப்பட உள்ளது என்றார். இக்கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் புனிதா, ஜெயந்தி, அன்புக்கரசி, சம்சாத், முனியம்மாள், கலா கலந்து கொண்டனர்.

 

நாமக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை

Print PDF

தினமணி            08.12.2010

நாமக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை

நாமக்கல், டிச. 7: நாமக்கலில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தவும், உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சோ.மதுமதி கூறினார். தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:

வணிக நிறுவனங்கள், காய்கறி விற்பனை அங்காடிகளில் பாலிதின் கவர்கள் பயன்படுத்தப்படுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். பிளாஸ்டிக் பைகள் நச்சுத் தன்மை கொண்டது. எனவே, 20 மைக்ரானுக்கு குறைவான திறன் கொண்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தக் கூடாது.

கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள், தங்கள் வீடுகளில் இருந்து துணி, சணல் பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். நச்சுத் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகள், கருப்பு பாலிதின் கவர்களை மாவட்டத்தில் உற்பத்தி செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது என தடை விதிக்கப்படுகிறது.

நகராட்சி, பேரூராட்சி, கிராமங்களில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுகிறதா என நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். தடையை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர் சோ.மதுமதி.

 

மரக்கன்று நடும் திட்டம் தொடக்கம்

Print PDF

தினமணி             08.12.2010

மரக்கன்று நடும் திட்டம் தொடக்கம்

மதுரை, டிச.7: ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்கீழ் மதுரை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை மரக்கன்றுகள் நடும் திட்டம் துவங்கப்பட்டது. இதில், 5 ஆயிரம் மரக்கன்றுகள் மாநகராட்சியால் பல்வேறு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.

மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மேயர் கோ. தேன்மொழி தலைமை வகித்தார். கமிஷனர் எஸ்.செபாஸ்டின் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியையொட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பின்னர் மேயர் கோ.தேன்மொழி கூறியது:

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.. அழகிரி தனது தேர்தல் வாக்குறுதியில் மதுரையில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் எனத் தெரிவித்தார். இதன் அடிப்படையில், 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை துவங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் 67 பள்ளிகள், மாநகராட்சிக்குச் சொந்தமான பண்ணைப்பட்டி, அவனியாபுரம், சக்கிமங்கலம் கழிவு நீரேற்று நிலையங்கள், கோச்சடை போன்ற இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றார்.

மரம் நடும் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன் கூறுகையில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்கீழ், கடந்தாண்டு தெப்பக்குளத்தில் மரம் நடும் திட்டத்தினை மத்திய அமைச்சர் மு.. அழகிரி தொடக்கிவைத்தார். கல்லூரிகள், குடியிருப்புகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் என தற்போதுவரை சுமார் 36,800 மரக்கன்றுகள் நடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவ மாணவியரிடம் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மரம் நடும் பணியில் ஈடுபட்டுள்ள சிறுதொழில் முனைவோர்க் கூட்டமைப்பினரும், மரம் வளர்ப்புக் குழுவினரும் பாராட்டுக்குரியவர்கள் என்றார்.

நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் க.இசக்கிமுத்து, துணை கமிஷனர் க.தர்ப்பகராஜ், தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், மக்கள் தொடர்பு அலுவலர் ரா.பாஸ்கரன், கனரா வங்கி மேலாளர் வரதசண்முகம், பள்ளி மாணவ, மாணவியர், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 57 of 135