Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

தரம் குறைந்த பிளாஸ்டிக் கவர்கள் தயாரிக்க தடை : தர்மபுரி நகராட்சியில் அதிரடி

Print PDF

தினமலர்                 08.12.2010

தரம் குறைந்த பிளாஸ்டிக் கவர்கள் தயாரிக்க தடை : தர்மபுரி நகராட்சியில் அதிரடி

தர்மபுரி: தர்மபுரி நகராட்சி பகுதிகளில் தரம் குறைந்த பிளாஸ்டிக் கவர்கள் தயாரிக்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தர்மபுரி நகராட்சி சாதாரண கூட்டம் நகராட்சி தலைவர் ஆனந்தகுமார் ராஜா தலைமையில் நடந்தது. கமிஷனர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

நாட்டான்மாது (தி.மு..,): நகராட்சி பகுதியில் தரம் குறைந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைக்காரர்கள் மற்றும் பிளாஸ்டிக் தயாரிக்கும் கம்பெனி மீது அதிக அபராதம் விதிக்க வேண்டும். முக்கியமாக தரம் குறைந்த பிளாஸ்டிக் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்.

நகராட்சி தலைவர் ஆனந்தகுமார் ராஜா: மறு சுழற்சிக்கு உகந்த பிளாஸ்டிக் பொருட்களை கடைகள் பயன்படுத்த வேண்டும். தர்மபுரியில் ஏழு பிளாஸ்டிக் தயாரிக்கும் கம்பெனிகள் செயல்படுகிறது. இந்த கம்பெனிகளுக்கு முன் அறிவிப்பு செய்யப்படும். தரமற்ற பிளாஸ்டிக் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு 5,000 ரூபாய் அபராதமும், கடைகளுக்கு 1,000 ரூபாய் மற்றும் தள்ளுவண்டி கடைகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

வேணுகோபால் (காங்.,): இது குறித்து முன் அறிவிப்பு செய்த பின்னரும் கடைகளில் தரமற்ற பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டால் அபராதம் விதிக்க வேண்டும். மேலும் அபராத தொகையை குறைக்க வேண்டும்.

ஆனந்தகுமார் ராஜா: அனைத்து பேக்கரி, மளிகை கடைகள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு முன் அறிவிப்பு தந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும்.

உன்னிகிருஷ்ணன் (.தி.மு..,): தர்மபுரி, பச்சியம்மன் கோவில் அருகே இறந்தவர்களுக்கான சடங்குகள் செய்ய வசதி ஏற்படுத்தி தர நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனந்தகுமார் ராஜா: பச்சியம்மன் கோவில் அருகே இறந்தவர்களுக்கான சடங்கு செய்ய நகராட்சி சார்பில் 10 லட்ச ரூபாயில் வசதிகள் செய்யும் பணிக்கு விரைவில் டெண்டர் விடப்படும்.

ஜெயந்தி (வி.சி.,): தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரால் கொசு உற்பத்தி அதிகமாகிவருகிறது. சாக்கடை கால்வாய்கள் அடைப்பட்டு உள்ளது. கொசு மருந்து அடிப்பதில்லை. வீரியம் குறைந்த கொசு மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. தெருக்களில் தேக்கமடைந்துள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி ஆட்டோக்கள் மற்றும் குப்பை அள்ளும் வகனங்கள் வருவதில்லை.

ஆனந்தகுமார் ராஜா: நகராட்சி வாகனங்கள் எஃப்.சி.,க்கு அனுப்பபட்டதால் வாகனங்கள் வராமல் இருந்திருக்கும். தற்போது, வாகனங்கள் தெருக்களில் வந்து குப்பை அள்ளி சென்றால் அந்தந்த பகுதி கவுன்சிலர்களிடம் டிரைவர்கள் கையொப்பம் வாங்கி வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Last Updated on Wednesday, 08 December 2010 09:11
 

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை ஆட்சியர் அறிவிப்பு

Print PDF

தினகரன்                08.12.2010

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை ஆட்சியர் அறிவிப்பு

நாமக்கல், டிச.8: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கட்டுப்படுத்துதல் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியர் மதுமதி பேசியதாவது:

மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், பழ விற்பனை அங்காடிகள், மற்றும் காய்கறி விற்பனை அங்காடிகளில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கருப்பு பாலிதின் பைகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

மளிகை கடைகள், பழ அங்காடிகள், உணவு விடுதிகள் மற்றும் இதர வகை நிறுவனங்களில் இருந்து பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் போது கருப்பு பாலிதின் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுகிறது.

இது போன்ற பிளாஸ்டிக் பைகள் மிகவும் நச்சுத் தன்மை வாய்ந்ததாகும். எனவே இதை பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 20 மைக்ரானுக்கு குறைவான திறன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. கடைகளுக்கு உணவுப் பொருட்களை வாங்க செல்லும் பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் இருந்து துணிப் பைகள், சணல் பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். நச்சுத் தன்மை வாய்ந்த பிளாஸ்டிக் பைகள், கருப்பு பாலிதின் கவர்கள், மாவட்டங்களில் உற்பத்தி செய்யவோ, அதை பயன்படுத்தவோ கூடாது. அதற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.

நகராட்சி, பேரூராட்சி மற்றும் சிறு நகரங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிக்கவேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மதுமதி தெரிவித்தார்.

 

மாநகராட்சி 67 பள்ளிகளிலும் மரம் நடும் திட்டம் துவக்கம்

Print PDF

தினகரன்            07.12.2010

மாநகராட்சி 67 பள்ளிகளிலும் மரம் நடும் திட்டம் துவக்கம்

மதுரை, டி. 8: மாநகராட்சி அலுவலகம், 67 பள்ளிகளிலும் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கியது. மதுரை நகரில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு பசுமையாக்கப்படும் என மத்திய அமைச்சர் மு..அழகிரி தேர்தல் வாக்குறுதி அளித்தார். இதுவரை 36 ஆயிரத்து 800 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

மாநகராட்சி சார்பில் அலுவலகம், 67 பள்ளிகள் , நீரேற்று நிலையம், கழிவு நீரேற்று நிலையங்களில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி வளாகத்தில் நேற்று மேயர் தேன்மொழி மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். ஆணையாளர் செபாஸ்டின் பேசும்போது "ஒரு மரம் வளர்த்தால் 20 சதவீதம் கார்பன்டை ஆக்சை டை உறிஞ்சி, 14 சதவீதம் ஆக்சிசனை வெளியிடுகிறது. பள்ளி மாணவ மாணவிகளிடையே மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்" என்றார்.

விழாவில் மண்டல தலைவர் இசக்கிமுத்து, தலைமை பொறியாளர் சக்தி வேல், துணை ஆணையாளர் தர்ப்பகராஜ், திட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன், மரம் வளர்ப்பு குழு செயலாளர் ஜெகதீசன், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

 


Page 58 of 135