தினகரன் 01.11.2010
வீட்டுக்கு ஒரு மரம் வளருங்கள் மாநகராட்சி அதிகாரி கோரிக்கை
பெங்களூர்,நவ.1:ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுக்கு வெளியேயுள்ள ஒரு மரத்தையாவது வளர்க்க வேண்டும். இதனால் நகரில் சுற்றுச்சூழல் மேம்பட்டு பசுமை அதிகரிக்கும் என்று மாநகராட்சி வன பாதுகாப்பு அதிகாரி சாந்தகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களையும் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம். அந்த முறையில் அவரவர் பகுதி யிலுள்ள உள்ள மரங் களை பொறுப் பேற்று, பாதுகாக்க முடியும். இதனால் அநாவ சிய மாக கிளை களை, மரங் களை வெட் டுவது போன்ற வை தடுக்கப்படுவதுடன், பசுமையை பாதுகாப்பதில் மக்களின் ஆர்வமும் மேலோங்கும்.
உலகளாவிய பசுமை மயமாக்குதலுக்கு ஒவ்வோரு வரும் மரங்களை நட்டு, அவற்றை வளர்ப்பதை விட, எளிதான மாற்றுவழி வேறு இல்லை. இது தொடர்பாக குடியிருப்பு நல சங்கங்களின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சிகள் நடந்து வருகிறது.
ஒவ்வோரு வரும் தங்கள் வீட்டுக்கு வெளி யேயுள்ள ஒரு மரத்தையாவது பொறுப்பேற்று வளர்த்தால், பசுமை மயமாக்கும் பணி மிக சிறப்பாக நடக்கும் தற்போது கிராமப்பகுதி களிலும் உள்ள விளை நிலத்திற்கு உரிமையாளரே பொறுப்பேற்று வளர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.