தினமலர் 05.10.2010
பெரியகுளத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை
பெரியகுளம்:பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நகராட்சியில், கமிஷனர் (பொறுப்பு) மோனி தலைமையில் நடந்தது. சுகாதார ஆய்வாளர்கள் அகமதுகபீர், ஜெயசீலன் முன்னிலை வகித்தனர். ஓட்டல்கள், டீக்கடை உரிமையாளர்கள், வர்த்தக சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர் உட்பட வணிக நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். அக்., 15ம் தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்களை யாரும் பயன்படுத்தக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தல் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.