Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

தர்மபுரி நகராட்சியில் பிளாஸ்டிக் சேகரிக்கும் மாற்றுத்திறனாளிகள்

Print PDF

தினகரன் 30.09.2010

தர்மபுரி நகராட்சியில் பிளாஸ்டிக் சேகரிக்கும் மாற்றுத்திறனாளிகள்

தர்மபுரி, செப்.30: தர்மபுரி நகராட்சியில் உள்ள 33வார்டுகளில் நாள்தோறும் 30 டன் கழிவு குப்பைகள் அள்ளப்படுகிறது. இதனை வாகனங்கள் மூலம் நகராட்சி ஊழியர்கள் சேகரித்து கொட்டுகின்றனர். இந்த சேவையில் தற்போது தர்மபுரி மாவட்ட மாற்றுத்திறனாளி நலசங்க உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளனர். இச்சங்கத்தில் உறுப்பினர்களாக 40 பேர் உள்ளனர்.

பொதுமக்கள் போடும் கழிவுகளில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இவர்கள் சேகரித்து விற்பனை செய்ய நகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. இச்சேவையை நகரமன்றத்தலைவர் ஆனந்தகுமார் ராஜா நேற்றுமுன்தினம் தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நல சங்க தலைவர் யுவராஜ், உதவும் உள்ளங்கள் தலைவர் மாணிக்கம், லயன்ஸ் சங்க தலைவர் ரவி, செயலாளர் லட்சுமி காந்தன், மாற்றுத்திறனாளிகள் நல சங்க நகர செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். யுவராஜ் கூறும்போது, நகராட்சி உள்ள மருத்துவமனைகள், தனியார் தங்கும்விடுதிகள் மற்றும் வர்த்த நிறுவனத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை சில்லறை முறையில் சேகரித்து தரம் பிரித்து மொத்தமாக விற்பனை செய்ய உள்ளோம். முதல் கட்டமாக இப்பணியில் இறங்கிஉள்ளோம். போகப்போக மேலும் விரிவுப்படுத்தவும் உள்ளோம் என்று கூறினார்.

 

பிளாஸ்டிக் பொருள்கள் அழிப்பு

Print PDF

தினமணி 28.09.2010

பிளாஸ்டிக் பொருள்கள் அழிப்பு

பழனி, செப். 27: பழனியில் நகராட்சி சார்பில் விதிமுறை மீறிய பிளாஸ்டிக் பொருள்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டன.

பழனி நகராட்சி சார்பில் துப்புரவு ஆய்வாளர்கள், சுகாதாரத் துறையினர் நகராட்சிப் பணியாளர்களுடன் பழனி பஸ் நிலையம், மார்க்கெட், அடிவாரம் உள்ளிட்ட பல பகுதிகளில் திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பழனியில் பல்வேறு பகுதிகளிலும் விதிமுறை மீறி விற்கப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள், கப்புகளைக் கைப்பற்றி பெரியப்பா நகரில் உள்ள உரக் கிடங்குக்குக் கொண்டு சென்று அழித்தனர்.

கடைகளில் பிளாஸ்டிக் பொருள்களைக் கைப்பற்றுவதைத் தவிர்த்து, இப் பொருள்களை மொத்தமாக விற்கும் குடோன்களைக் கண்காணித்து அங்கு கைப்பற்றினால் இச்செயல்களைத் தவிர்க்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்

 

அரசு மருத்துவமனைகளில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: ஆட்சியர்

Print PDF

தினமணி 24.09.2010

அரசு மருத்துவமனைகளில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: ஆட்சியர்

தேனி, செப். 23: தேனி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக தேனி மாவட்ட ஆட்சியர் பூ.முத்துவீரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. 6 நகராட்சிகளில் உள்ள உணவகங்கள், இறைச்சிக் கடைகள் மற்றும் இதர கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதில்லை. பொதுமக்களிடையே இது குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், பொதுப்பணித் துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகிற அக்டோபர் 2-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்திலுள்ள 29 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 162 துணை சுகாதார நிலையங்கள், 6 அரசு மருத்துவமனைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதும் அக்டோபர் 2-ம் தேதி முதல் தடை செய்யப்படுகிறது.

மேற்கூறிய இடங்களில் மாற்று ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நோயாளிகள், பார்வையாளர்கள் பிளாஸ்டிக் பைகள், பொருள்கள் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

 


Page 71 of 135